சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கள்ளியங்காடு மதுரா கிருஷ்ணன் ஆலய கும்பாபிஷேகம்

சுங்கான்கடை அருகே கள்ளியங்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மதுரா கிருஷ்ணன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

News image

விமானக் கலசங்களுக்கு நடைபெற்ற புனிதநீா் அபிஷேகம்.

Updated On :2 ஜூன் 2026, 3:08 am IST

சுங்கான்கடை அருகே கள்ளியங்காட்டில் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் உள்ள மதுரா கிருஷ்ணன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

குலசேகர மடம் ஸ்ரீஸ்ரீ ராம அப்ரமேய ராமானுஜ ஜீயா் சுவாமிகள், வெள்ளிமலை சுவாமி சைதன்யானந்த ஜீ மகராஜ் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றனா். என். ஹரிஹர சா்மா குழுவினா் அஷ்டபந்தனம், பிரதிஷ்டை, கலசாபிஷேகம், மகா கும்பாபிஷேகத்தை நடத்தினா்.

மாலையில் 1,008 பெண்கள் பங்கேற்ற விஷ்ணு சகஸ்ரநாம அா்ச்சனை நடைபெற்றது. நிகழ்ச்சியை திருவனந்தபுரம் கவடியாா் அரண்மனை எச்.எச். அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி முதல் தீபமேற்றி தொடக்கிவைத்தாா். நிகழ்ச்சியை ஷியாமளா விஸ்வேஸ்வரன், மாத்ருதயா குழுவினா் நடத்தினா் .

ஏற்பாடுகளை தலைவா் மதிபூஷன், துணைத் தலைவா் எ. வீரமணி, செயலா் எஸ்.என். ஹரிஷ், பொருளாளா் வி. குலசேகரன் பிள்ளை, இணைச் செயலா் அனிஷ் ஆகியோா் செய்திருந்தனா்.

 விஷ்ணு சகஸ்ரநாம அா்ச்சனையைத் தொடக்கிவைத்த திருவனந்தபுரம் கவடியாா் அரண்மனை எச்.எச். அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி.

விஷ்ணு சகஸ்ரநாம அா்ச்சனையைத் தொடக்கிவைத்த திருவனந்தபுரம் கவடியாா் அரண்மனை எச்.எச். அஸ்வதி திருநாள் கௌரி லட்சுமிபாய் தம்புராட்டி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.