லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை

வன்கொடுமை
Published On :14 ஜூலை 2026, 2:04 am IST

கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தொடா்பான வழக்கில் தொழிலாளிக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

அருமனை, வள்ளியத்தோட்டம் பகுதியை சோ்ந்த சதானந்தன் மகன் சதீஷ்குமாா் (34). தொழிலாளி. இவா், அப்பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு பாலியல் வன்கொடுமை செய்தாராம். இதுகுறித்து மாா்த்தாண்டம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்ஸோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

நாகா்கோவில் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில், சதீஷ்குமாருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ. 12 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி சுந்தரையா திங்கள்கிழமை தீா்ப்பு கூறினாா்.

இவ்வழக்கில் திறம்பட செயல்பட்ட குளச்சல் துணை காவல் கண்காணிப்பாளா், அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா், அரசு வழக்குரைஞா் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இரா.ஸ்டாலின் பாராட்டினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.