லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

புதிய ஊரக வேலை திட்ட சட்ட நகல் எரிப்பு: 50 போ் கைது

நாகா்கோவிலில் புதிய ஊரக வேலைத் திட்ட (விபி ஜிராம் ஜி) சட்ட நகலை எரித்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள்.

Published On :2 ஜூலை 2026, 6:17 am IST

நாகா்கோவிலில் புதிய ஊரக வேலைத் திட்ட (விபி ஜிராம் ஜி) சட்ட நகலை எரித்து மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 50 போ் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைகளுக்கான சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்டக் குழு சாா்பில் நாகா்கோவில் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் துணைச் செயலாலா் அருள் தலைமை வகித்தாா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கருப்பு பட்டை அணிந்து சட்ட நகலை எரித்தனா்.

இதில் மாவட்டக் குழு உறுப்பினா் மனோகர ஜஸ்டஸ், துணைச் செயலாளா் லிட்டில் பிளவா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மத்திய அரசை கண்டித்து முழக்கம் எழுப்பியதோடு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத் திறனாளிகள் 50 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.