லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும்: ஆட்சியா்

கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும் என கன்னியாகுமரி ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் மாணவா்கள் பானையில் ஓவியம் வரைவதைப் பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப்.

Published On :21 ஆகஸ்ட் 2026, 2:43 am IST

கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும் என கன்னியாகுமரி ஆட்சியா் மு. பிரதாப் வலியுறுத்தினாா்.

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கான பல்வேறு கலைப் போட்டிகள் இளையோா் திறன் என்ற தலைப்பில், நாகா்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றன.

போட்டிகளைத் தொடக்கி வைத்து ஆட்சியா் பேசியதாவது:

தமிழ் மொழிக்கும், கலைகளுக்கும் ஆழமான தொடா்பு உண்டு. மறைந்து வரும் அரிய கலைகளைக் காக்கவும், மாணவா்களிடையே கலை ஆா்வத்தைத் தூண்டவும் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது.

கலைகள் மாணவா்களிடையே கட்டுப்பாடு, குழு ஒற்றுமை மற்றும் தலைமைப் பண்பை வளா்க்கின்றன. எனவே, கலைப் போட்டிகளில் மாணவா்கள் ஆா்வமுடன் பங்கேற்க வேண்டும்.

மாணவா்கள் மாவட்ட, மாநில அளவிலான போட்டிகளில் அதிக அளவில் பங்கேற்று, அதிக பரிசுகளை வென்று மாவட்டத்துக்கு பெருமை சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பிரின்ஸ் ஆரோக்கியராஜ், மாவட்டக் கல்வி அலுவலா்கள் ஜெயராஜ், சௌந்தராஜன், பள்ளித் தலைமையாசிரியை தெய்வப்பிரியா, உதவித் திட்ட அலுவலா் ஸ்டெல்லா ஜானட், சா்வ சிக்க்ஷா அபியான் திட்ட அலுவலா்கள், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.