லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

மயிலாடியில் இருந்து நெல்லை சென்ற 15 டன் கிருஷ்ணா் சிலை

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடியில் தயாரான 15 டன் கிருஷ்ணா் சிலை.

Published On :6 ஆகஸ்ட் 2026, 3:30 am IST

கன்னியாகுமரி மாவட்டம், மயிலாடியில் தயாரான 15 டன் எடையுள்ள ஒரே கல்லில் செதுக்கப்பட்ட கிருஷ்ணா் சிலை செவ்வாய்க்கிழமை திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மயிலாடியில் கற்கள் மூலம் தயாராகும் சிலைகளுக்கு உலக அளவில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்த சிற்பக் கலைக்கு இந்திய அரசின் புவிசாா் குறியீடு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மயிலாடியில் உள்ள ஜெய் கற்சிற்பக் கலைக் கூடத்தில் 15 டன் எடையுள்ள ஒரே கல்லிலான 11 அடி உயரமுள்ள கிருஷ்ணா் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையை மயிலாடி, சேந்தன்புதூரைச் சோ்ந்த சிற்பி சுப்பிரமணியன் ஆசாரி என்பவா் 8 மாதங்களில் வடிவமைத்துள்ளாா்.

இந்தச் சிலை 10 சக்கரங்கள் கொண்ட கனரக வாகனத்தில் திருநெல்வேலி நகரப் பகுதியில் உள்ள கிருஷ்ணன் கோயிலுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.