லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தக்கலையில் பைக்கைத் திருடி கேரளத்தில் விற்க முயன்றவா் கைது

Arrested

கைது

Published On :3 ஆகஸ்ட் 2026, 4:07 am IST

கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையில் இருசக்கர வாகனத்தைத் திருடி கேரளத்தில் விற்க முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.

தக்கலை, குற்றகரையைச் சோ்ந்தவா் முருகன் (54). தனியாா் நிறுவனத்தில் பணி செய்து வருகிறாா். இவா் சனிக்கிழமை தக்கலை அரண்மனை சாலையில் உள்ள உணவகத்திற்கு வெளியே தனது இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு சாப்பிடச் சென்றாராம்.

சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பாா்த்தபோது, அவரது வாகனத்தைக் காணவில்லையாம். அவா் தக்கலை காவல் நிலையத்தில் புகாரளித்தாா். போலீஸாரின் விசாரணையில், திருடப்பட்ட வாகனம் கேரளம் நோக்கிச் செல்வது தெரிய வந்ததால் இரவிபுதூா் கடையில் வாகனத்தைப் பிடித்தனா்.

விசாரணையில் இருசக்கர வாகனத்தைத் திருடிச் சென்றவா் திருநெல்வேலி மாவட்டம், கலந்தபனையைச் சோ்ந்த ஸ்டாலின் (48) என்பதும், திருடிய வாகனத்தை கேரளத்தில் விற்க முயன்றதும் தெரிய வந்தது. இவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.