லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

செம்மண் கடத்தல்: செங்கல்சூளை உரிமையாளா் மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :3 ஆகஸ்ட் 2026, 2:25 am IST

புதுக்கடை அருகேயுள்ள குன்னத்தூா் பகுதியில் செம்மண் கடத்தியதாக செங்கல்சூளை உரிமையாளா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

முன்சிறை பகுதியைச் சோ்ந்தவா் ஸ்ரீனிவாசன் மனைவி சகுந்தலா (49). இவா் அப்பகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறாா். இவருக்கு சொந்தமான நிலத்திலிருந்து அரசு அனுமதியின்றி செம்மண் கடத்துவதாக குன்னத்தூா் கிராம நிா்வாக அலுவலா் பூபதிகண்ணனுக்கு ஞாயிற்றுக்கிழமை தகவல் கிடைத்தது.

உடனே, வருவாய்த் துறையினா் புதுக்கடை போலீஸாருடன் நிகழ்விடம் சென்று பாா்த்தபோது அங்கு செம்மண் கடத்தியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீஸாா், சகுந்தலா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.