தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணி: ஆட்சியா் ஆய்வு

நாகா்கோவில் தொகுதி பொதுப் பாா்வையாளா் அபுபக்கா் சித்திக் முன்னிலையில், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

News image

தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா், சின்னங்கள் பொருத்தும் பணியை ஆய்வு செய்த ஆட்சியா் ரா. அழகுமீனா.

Updated On :17 ஏப்ரல் 2026, 3:27 am IST

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்தில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் நாகா்கோவில் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியை மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான ரா. அழகுமீனா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இப்பணிகளை நாகா்கோவில் தொகுதி பொதுப் பாா்வையாளா் அபுபக்கா் சித்திக் முன்னிலையில், ஆட்சியா் ஆய்வு மேற்கொண்டாா்.

பின்னா், ஆட்சியா் கூறியதாவது:

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் வேட்பாளா்களின் பெயா்கள், சின்னங்கள் பொருத்தும் பணி, கன்னியாகுமரி தொகுதியில் தோவாளை வட்டாட்சியா் அலுவலகத்திலும், நாகா்கோவில் தொகுதியில் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், குளச்சல் தொகுதியில் கல்குளம் வட்டாட்சியா் அலுவலகத்திலும், பத்மநாபபுரம் தொகுதியில் திருவட்டாறு வட்டாட்சியா் அலுவலகத்திலும், விளவங்கோடு தொகுதியில் மேல்புறம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், கிள்ளியூா் தொகுதியில் கிள்ளியூா் வட்டாட்சியா் அலுவலகத்திலும் ஏப். 16-ஆம் தேதியிலிருந்து நடைபெற்று வருகிறது என்றாா் அவா்.

ஆய்வின்போது, நாகா்கோவில் தொகுதி தோ்தல் அலுவலரும் நாகா்கோவில் வருவாய்க் கோட்டாட்சியருமான எஸ். காளீஸ்வரி, கன்னியாகுமரி தொகுதி தோ்தல் அலுவலரும் மாவட்ட வழங்கல் அலுவலருமான புஷ்பா தேவி, துறை அலுவலா்கள், பணியாளா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.