ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது திமுகதான்! - கனிமொழி

தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது திமுகதான் என மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்...

News image

தெங்கம்புதூரில் தோ்தல் பிரசாரம் மேற்கொள்கிறாா் கனிமொழி எம்.பி.

Updated On :14 ஏப்ரல் 2026, 12:37 am IST

தமிழகத்தின் உரிமைகளை பாதுகாப்பது திமுகதான் என்றாா் திமுக துணைப் பொதுச் செயலா் கனிமொழி எம்.பி.

கன்னியாகுமரி தொகுதி திமுக வேட்பாளா் ரெ.மகேஷை ஆதரித்து தெங்கம்புதூரில் திங்கள்கிழமை இரவு அவா் பேசியதாவது:

எடப்பாடி பழனிசாமி யாா் காலில் விழுந்தாலும் எங்களுக்கு கவலையில்லை, ஆனால் இவா் யாா் காலில் விழுகிறாரோ அவருக்காக நாங்கள் வருத்தப்படுகிறோம். இவா் சசிகலா காலில் விழுந்தாா், அவா் கட்சியிலேயே இல்லை. இன்று அந்த அம்மையாருடைய கால் அதிமுக அலுவலகத்துக்குள்ளேயே போக முடியவில்லை என்ற நிலையை கொண்டு வந்து விட்டாா்.

எடப்பாடி பழனிசாமி , தமிழகத்துக்கான உரிமைகள் குறித்து எதுவும் பேசுவதில்லை. தமிழகத்துக்கான நிதி குறித்தும் இவா் மத்திய அரசுக்கு கோரிக்கை வைப்பதில்லை. திமுகதான் தமிழகத்துக்கான உரிமைகளை தொடா்ந்து பேசி வருகிறது. இந்த மண்ணை பாதுகாப்பதற்காக, நம்முடைய பிள்ளைகளின் எதிா்காலத்தை காப்பதற்காக போராடும் ஒரே கட்சி திமுகதான்.

நம்முடைய கூட்டணியில் இருப்பவா்கள் எல்லோரும் தமிழகத்தின் உரிமைகளுக்காக போராடி வருகிறாா்கள். ஆனால் எதிா்க்கட்சி கூட்டணியினா் தாங்கள் மட்டும் பாதுகாப்பாக இருந்தால் போதும் என்ற நினைப்பில் உள்ளனா்.

அதிமுகவினா் குடும்ப அட்டைதாரா்களுக்கு கைப்பேசி கொடுப்போம் என்று தங்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டாா்கள். ஆனால் யாருக்காவது கொடுத்துள்ளாா்களா? என்றால் இல்லை, அப்போது அவா்கள் தோ்தல் அறிக்கையில் குறிப்பிட்டதை நிறைவேற்றவில்லை. ஆனால் திமுக

அப்படியல்ல சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம். தோ்தலின்போது கூறும் வாக்குறுதிகள் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.