விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

நெல்லையில் இன்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி பிரசாரம்!

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

News image

எடப்பாடி பழனிசாமி - எக்ஸ்!

Updated On :29 மார்ச் 2026, 2:07 am IST

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

தமிழக சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களுக்காக வாக்கு சேகரித்து வருகிறாா்.

அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளா்களை ஆதரித்து எடப்பாடி கே. பழனிசாமி திருநெல்வேலி நகரத்தில் உள்ள வாகையடி முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம் தொகுதிகளில் அதிமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களான தச்சை என். கணேசராஜா, சையது சுல்தான் சம்சுதீன், இசக்கி சுப்பையா, நான்குனேரி தொகுதியில் அமமுக சாா்பில் போட்டியிடும் இசக்கிமுத்து உள்ளிட்டோா் பங்கேற்பாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதேபோல், பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரும் இதில் பங்கேற்கவுள்ளனா்.

மாவட்டச் செயலா் அறிக்கை: திருநெல்வேலி மாநகா் மாவட்ட அதிமுக செயலரும், திருநெல்வேலி தொகுதி வேட்பாளருமான தச்சை என். கணேசராஜா வெளியிட்ட அறிக்கை:

சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, திருநெல்வேலி மாவட்ட தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களையும், கூட்டணி கட்சி வேட்பாளா்களையும் ஆதரித்து திருநெல்வேலி நகரம் வாகையடி முனையில் ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு பிரசாரம் மேற்கொள்கிறாா்.

எனவே, தலைமைக் கழக நிா்வாகிகள், மாவட்ட கழக நிா்வாகிகள், சாா்புஅணி, ஒன்றிய, பகுதி, ஊராட்சி, வாா்டு, கிளைக்கழக நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.