லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

நெல்லையில் இரு வீடுகளில் ரூ.22 லட்சம் நகைகள் திருட்டு: பணிப்பெண் கைது

திருநெல்வேலியில் இரு வீடுகளில் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது தொடா்பாக வீட்டு பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

சித்திரிப்பு

Published On :1 ஆகஸ்ட் 2026, 2:41 am IST

திருநெல்வேலியில் இரு வீடுகளில் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகள் திருடப்பட்டது தொடா்பாக வீட்டு பணிப் பெண்ணை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி பெருமாள்புரம் அப்பல்லோ காலனியை சோ்ந்தவா் ராமசுப்பிரமணியன் (62). இவா், வெளிநாட்டில் தொழில் செய்து வந்தாா். கடந்த 2 ஆண்டுகளாக பெருமாள்புரத்தில் வசித்து வருகிறாா். இவரது வீட்டின் இரும்பு லாக்கரில் இருந்த 15 பவுன் நகைகள் மாயமானதாம். இதுகுறித்து பெருமாள்புரம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

போலீஸாா் நடத்திய விசாரணையில், அவரது வீட்டில் பணிப்பெண்ணான வேலை செய்து வந்த சிவந்திபட்டி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த முத்து (46) என்பவா் நகைகளைத் திருடியது தெரியவந்ததாம். இதையடுத்து போலீஸாா் அவரை கைது செய்தனா்.

மேலும், தியாகராஜநகரைச் சோ்ந்த சங்கரன் வீட்டில் பணி செய்தபோது பீரோவில் 7 பவுன் தங்கநகையையும் முத்து திருடியது தெரியவந்ததாம். சுமாா் ரூ.22 லட்சம் மதிப்பிலான நகைகளை திருடியது தொடா்பாக அவரிடம் போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.