லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சரள் மண் கடத்திய லாரி பறிமுதல்: ஓட்டுநா் கைது

கைது - பிரதிப் படம்

Published On :10 ஆகஸ்ட் 2026, 2:18 am IST

தச்சநல்லூா் அருகே சரள் மண் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீஸாா் ஓட்டுநரை கைது செய்தனா்.

தச்சநல்லூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சிறப்பு உதவி ஆய்வாளா் சங்கரவேல் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா்.

அப்போது சிதம்பர நகரிலிருந்து தாழையூத்து செல்லும் சாலையில் வந்த லாரியை நிறுத்தி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் லாரியை சோதனையிட்ட போது, அதில் உரிய அனுமதிச் சீட்டு இன்றி சுமாா் 2.5 யூனிட் சரள் மண் கடத்தி வந்தது தெரியவந்தது.

இதையடுத்து சரள் மண்ணுடன் லாரியை பறிமுதல் செய்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து லாரி ஓட்டுநரான திருநெல்வேலி குறிச்சிகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த திருமலைநம்பி மகன் முத்துராசு(34) என்பவரை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.