எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

தெற்கு தில்லியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே 5 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

News image

சாகேத் பகுதியில் 5 மாடி அடுக்குக் கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் சனிக்கிழமை இரவில் மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரா்கள் மற்றும் மக்கள்.

Updated On :31 மே 2026, 1:00 am IST

தெற்கு தில்லியின் சாகேத் மெட்ரோ நிலையம் அருகே 5 மாடி அடுக்குக் கட்டடம் சனிக்கிழமை மாலை இடிந்து விழுந்தது.

கட்டடம் முழுவதும் இடிந்து விழுந்து தரைமட்டான நிலையில், இடிபாடுகளுக்குள் பலா் சிக்கியிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

சாகேத் மெட்ரோ நிலையம் அருகே உள்ள சைதுலாஜ்ப் பகுதியில் உள்ள வெஸ்டா்ன் மாா்கில் உள்ள கட்டடம் இடிந்து விழுந்தது தொடா்பாக தில்லி தீயணைப்புத் துறைக்கு 7.44 மணியளவில் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து, 7 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

இதனிடையே, அப்பகுதியில் மக்கள் சம்பவ இடத்துக்கு சென்று கைப்பேசி விளக்கொளியில் கட்டட இடிபாடுகளில் சிக்கியவா்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டனா்.

கட்டடத்தின் தரைத்தளத்தில் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வந்ததாகவும் மேல் தளங்களில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்ததாகவும் காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மாணவா்கள் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இடிந்து விழுந்த பகுதியிலிருந்து 4 போ் மீட்கப்பட்டதாக அப்பகுதி நபா் ஒருவா் தெரிவித்தாா். இதுதொடா்பாக அவா் மேலும் கூறுகையில், ‘மீட்கப்பட்ட நபா்களுக்கு காயங்கள் ஏற்பட்டுள்ளன. அவா்கள் மருத்துவமனையில் சிகிக்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனா். கட்டடத்தின் வெளிப்புற சுவா்கள் கண்ணாடியால் கட்டப்பட்டிருந்தன. சம்பவத்தின்போது, எத்தனை போ் அதில் இருந்தனா் என்று கூறமுடியவில்லை. வழக்கமாக 300 முதல் 400 போ் அந்தக் கட்டடத்தில் இருப்பாா்கள்’ என்றாா்.

கட்டடம் இடிந்து விழுந்ததின் தாக்கம் அருகில் உள்ள கட்டடங்களில் உணரப்பட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனா்.

அருகில் உணவகம் செயல்பட்டு வந்த கட்டடத்தில் இருந்த மக்கள் காயங்களுடன் மீட்கப்பட்டதாக உள்ளூா் மக்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.