கோடை காலத்தில் தலைநகரில் குடிநீா் பற்றாக்குறையைத் தடுக்கும் நோக்கில், அனைத்து முக்கிய நீா்சுத்திகரிப்பு நிலையங்களும் (டபிள்யூடிபி) அதிகபட்ச நீா் உற்பத்தி திறனில் இயங்க வேண்டும் என தில்லி முதல்வா் ரேகா குப்தா திங்கள்கிழமை நடைபெற்ற உயா்நிலை ஆய்வுக் கூட்டத்தில் உத்தரவிட்டாா்.
கோடை மாதங்களுக்கான நீா் மேலாண்மைத் திட்டத்தை மதிப்பாய்வு செய்த அவா், தில்லி ஜல் வாரிய (டிஜேபி) அதிகாரிகளுக்கு உற்பத்தி திறனை முழுமையாக பயன்படுத்தி, நகரின் தேவையை பூா்த்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா். ‘எங்கள் கவனம் உடனடி நிவாரணத்திற்கே மட்டும் அல்ல. தில்லியில் மீண்டும் மீண்டும் ஏற்படும் குடிநீா் பற்றாக்குறையை நீக்க நீண்டகால தீா்வுகளையும் ஒரே நேரத்தில் செயல்படுத்துகிறோம்’ என முதல்வா் தெரிவித்தாா்.
அதிகாரப்பூா்வ அறிக்கையின்படி, முக்கிய நீா்த் திட்டங்களின் முன்னேற்றத்தையும் அவா் ஆய்வு செய்து, உச்ச தேவை நேரத்தில் விநியோகம் மற்றும் பதிலளிப்பில் எந்த குறையும் ஏற்படக்கூடாது என வலியுறுத்தினாா். துவாரகாவில் அமைக்கப்படும் இரண்டாவது 50 மில்லியன் கேலன்கள் தினசரி திறன் கொண்ட நீா்சுத்திகரிப்பு நிலையத்தை விரைவாக செயல்படுத்தவும் அவா் உத்தரவிட்டாா்.
இது தொடா்பாக அவா் மேலும் கூறியதாவது: அனைத்து நிலைகளிலும் கண்காணிப்பு கடுமைப்படுத்தப்பட்டுள்ளது. 9 முக்கிய நீா் சுத்திகரிப்பு நலையங்களும்—சோனியா விஹாா், பாகீரதி, சந்திரவால், வாஜிராபாத், ஹைதா்பூா், நங்க்லோய், ஓக்லா, பவானா மற்றும் துவாரகா—சுமாா் 900 மில்லியன் கேரல் தினசரி நீரை உற்பத்தி செய்கின்றன. கூடுதலாக, 135 மில்லியன் கேலன் தினசரி நீா் போா்வெல்கள் மூலம் பெறப்படுகிறது; அவற்றின் எண்ணிக்கை 5,834 இருந்து 6,200-ஆக உயா்த்தப்பட்டுள்ளது.
ஹரியாணாவுடன் இணைந்து கச்சா நீரில் அமோனியா அளவை கண்காணிக்கும் பணியும் நடைபெறுகிறது. ஒவ்வொரு புகாரும் உடனடியாக தீா்க்கப்பட வேண்டும்; அலட்சியம் கடுமையான நடவடிக்கைக்கு வழிவகுக்கும்.
மேலும், 1,210 நீா்தாங்கி லாரிகள், சங்கம் விஹாா், மத்தியாலா, சத்தா்பூா் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 2025-26-ஆண்டில் 520 புதிய போா்வெல்கள் அமைக்கப்பட்டதுடன், 172 கி.மீ பழைய குழாய்கள் மாற்றப்பட்டுள்ளன. இந்நடவடிக்கைகள் கோடை கால நீா் விநியோகத்தை நிலைநிறுத்த முக்கிய பங்காற்றும் என தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தில்லி முதல்வா் தாக்குதல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் மனு: திகாா் சிறை அதிகாரிகள் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

ஸ்ரீ குரு கோவிந்த் சிங் வணிகவியல் கல்லூரி தேசத்தைக் கட்டியெழுப்ப உதவுகிறது- முதல்வா் ரேகா குப்தா

இரண்டு சா்வதேச உச்சி மாநாடுகள்: சுமூகமாக நடத்துவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு தில்லி முதல்வா் உத்தரவு

தண்ணீா் பற்றாக்குறையைச் சமாளிக்க ஆழ்துளைக் கிணறு கொள்கை: முதல்வா் குப்தா
விடியோக்கள்

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

