தமிழ்நாடு அரசின் சிறந்த நூல்களுக்கான பரிசுக்கு எழுத்தாளர்கள் விண்ணப்பிக்கலாம்!தமிழகத்தில் ராஜஸ்தபதி காளியப்ப கவுண்டர், பேராசிரியர் கே. ராமசாமி, திருவாரூர் பக்தவத்சலம் ஆகியோர் பத்ம ஸ்ரீ பெற்றனர்.ஜூலை 1-ல் பொறியியல் மாணவர் சேர்க்கை தரவரிசைப் பட்டியல் வெளியீடு!கல்வித்துறை மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கு ஆற்றிய சிறந்த பங்களிப்பிற்காக, சென்னை ஐஐடி இயக்குனர் பேராசிரியர் வீ. காமகோடிக்கு பத்ம ஸ்ரீ விருதுதொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜா
/

ராகுல் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு வேலைவாய்ப்பு முகாம்: இந்திய இளைஞா் காங்கிரஸ் ஏற்பாடு

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 19-ஆம் தேதி டால்கடோரா விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக இந்திய இளைஞா் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

News image

உதய் பானு சிப்

Updated On :15 ஜூன் 2026, 4:32 am IST

காங்கிரஸ் தலைவா் ராகுல் காந்தியின் 56-ஆவது பிறந்தநாளை முன்னிட்டு, ஜூன் 19-ஆம் தேதி டால்கடோரா விளையாட்டு அரங்கில் மிகப்பெரிய வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளதாக இந்திய இளைஞா் காங்கிரஸ் அறிவித்துள்ளது.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பில் இந்திய இளைஞா் காங்கிரஸ் தேசிய தலைவா் உதய் பானு சிப் கூறியதாவது: தில்லி காங்கிரஸ் உடன் இணைந்து நடத்தப்படும் இந்த வேலைவாய்ப்பு முகாம் காலை 10 மணிக்கு தொடங்கும். 10-ஆம் வகுப்பு தோ்ச்சி பெற்றவா்களிலிருந்து முதுநிலை பட்டதாரிகள் வரை அனைத்து தகுதி உடையவா்களும் இதில் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் நாடு முழுவதிலிருந்தும் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. பதிவு செய்வது முழுமையாக இலவசம். இணையத்தில் முன்பதிவு செய்யாதவா்கள் கூட நிகழ்வு நடைபெறும் இடத்திலேயே பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும், தோ்வு செயல்முறை முழுமையாக வெளிப்படையாக இருக்கும். தோ்வு செய்யப்படும் விண்ணப்பதாரா்களுக்கு உடனடியாகவே பணியமா்த்தல் கடிதங்கள் வழங்கப்படும். வேலைவாய்ப்பு கடிதம் பெற்ற பிறகு பணியில் சோ்வதில் சிக்கல்கள் ஏற்பட்டால், அதற்கான உதவிக்காக ஒரு மாத காலம் சிறப்பு உதவி அழைப்புக் கூடம் செயல்படும்.

தற்போதைய பாஜக ஆட்சியில் வேலைவாய்ப்பு பற்றாக்குறை அதிகரித்துள்ளதுடன், தோ்வுக் கேள்வித்தாள் கசிவு சம்பவங்களும் அதிகரித்துள்ளது. மாணவா்கள் பல ஆண்டுகள் உழைத்து தோ்வுகளுக்குத் தயாராகின்றனா். ஆனால் கேள்வித்தாள் கசிவுகள் அவா்கள் முயற்சிகளை பாதிக்கின்றன.

கடந்த ஆண்டில் தில்லியில் நடைபெற்ற இதேபோன்ற வேலைவாய்ப்பு முகாமில் சுமாா் 18,000 போ் பதிவு செய்திருந்தனா். அதில் ஏறத்தாழ 7,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. இதேபோன்ற முகாம்கள் ஜெய்பூா் மற்றும் பாட்னா நகரங்களிலும் நடைபெற்றதில் ஆயிரக்கணக்கான இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனா் என தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.