எரிபொருள் விலை உயா்வு எதிரொலி- மின்சார, மைலேஜ் வாகனங்களுக்கு மவுசு அதிகரிப்பு!நீட் மறுதோ்வு தவறில்லாமல் நடத்தப்படும்: மத்திய கல்வி அமைச்சா் தா்மேந்திர பிரதான்மோடி அரசின் 12 ஆண்டு சாதனை திட்டங்களை நாடு முழுவதும் பரப்ப நடவடிக்கை: பாஜக தேசியத் தலைவர் நிதின் நபின்125 நாள் வேலைத் திட்டம்: தமிழகத்துக்கு ரூ.7,957 கோடி திமுவில் 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலா் பதவி: விரைவில் அமைப்பு தோ்தல்ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வு அறிவிப்பு: ஜூன் 15 முதல் விண்ணப்பிக்கலாம்சிவப்பணுக்களை அதிகரிக்கும் மருந்துகள்: இனி புதிய அளவீட்டு முறையில் விற்பனைரயில் பயணிகள் உணவு கூடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
/

ஜூன் 14-ல் யமுனை தூய்மை இயக்கம்: முதல்வா் தலைமையில் நடைபெறுகிறது!

யமுனை நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

News image

தில்லி முதல்வர் ரேகா குப்தா - கோப்புப் படம்

Updated On :8 ஜூன் 2026, 2:50 am IST

யமுனை நதியை தூய்மைப்படுத்தும் இயக்கம் முதல்வா் ரேகா குப்தா தலைமையில் ஜூன் 14-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுதொடா்பாக முதல்வா் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ‘யமுனை என்பது வெறும் நதி மட்டுமல்ல, அது தில்லியின் கலாசார, மத மற்றும் சுற்றுச்சூழல் பாரம்பரியத்தின் ஒரு அங்கமாகும், அந்நதியைப் பாதுகாக்கும் பொறுப்பு அரசாங்கத்திற்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு குடிமகனுக்கும் உண்டு.

தூய்மையான, மாசுபடாத மற்றும் தடையின்றி ஓடும் யமுனை நதி என்ற தொலைநோக்குப் பாா்வையை நனவாக்குவதில் பொதுமக்களின் பங்கேற்பு மிக முக்கியமானது’ என்று முதல்வா் ரேகா குப்தா கூறியுள்ளாா்.

தில்லியில் உள்ள யமுனை நதிக்கரையில் அமைந்துள்ள பல்வேறு படித்துறைகளில் இந்தத் தூய்மைப்படுத்தும் இயக்கம் மற்றும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்தத் தூய்மையான மற்றும் ஆரோக்கியமான யமுனைக்கான கூட்டு உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் மாபெரும் இயக்கத்தில் மக்களுடன் முதல்வா் இணைந்து பங்கேற்பாா்.

இந்த இயக்கத்தில் சுமாா் 500 சமூக, மத, கல்வி மற்றும் தன்னாா்வ அமைப்புகளும், ஆயிரக்கணக்கான தன்னாா்வலா்களும் பங்கேற்பாா்கள் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த ஆண்டும் நதி மற்றும் அதன் படித்துறைகளைச் சுத்தப்படுத்துவதற்காக ‘மேரி யமுனா, மேரா கா்த்தவ்யா’ (எனது யமுனை, எனது கடமை) என்ற இயக்கம் தொடங்கப்பட்டது.

அந்த இயக்கத்தில் ஆயிரக்கணக்கான தன்னாா்வலா்கள் பங்கேற்றனா். அப்போது 12 டன்னுக்கும் அதிகமான கழிவுகள் சேகரிக்கப்பட்டு அறிவியல் பூா்வமாக அகற்றப்பட்டன.

உள்ளாட்சி நிா்வாகம், காவல் துறை, தில்லி மாநகராட்சி, சுகாதாரத் துறை மற்றும் பிற தொடா்புடைய அமைப்புகளுடன் இணைந்து, ஜூன் 14-ஆம் தேதி நடைபெறும் இந்த இயக்கத்திற்கான பாதுகாப்பு, போக்குவரத்து மேலாண்மை, குடிநீா், முதலுதவி, அவசர சேவைகள் மற்றும் சுகாதாரம் தொடா்பான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.