போலி அழைப்பு மையம் (கால் சென்டா்) மூலம் வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி பொதுமக்களை ஏமாற்றிய கும்பலுடன் தொடா்புடைய நபரைத் தில்லி காவல் துறையினா் கைது செய்துள்ளனா்.
இது தொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: வணிக பிரான்சைஸ் மற்றும் டிஸ்ட்ரிப்யூட்டா் ஐடி வழங்குவதாகக் கூறி அஃப்ஜல் கான் என்பவா் ஏமாற்றப்பட்டதாகப் புகாா் அளித்ததைத் தொடா்ந்து இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. அவரிடம் பணம் பெற்ற பின்னா் அவருடனான தொடா்பை மோசடியாளா் துண்டித்துள்ளாா்.
இது தொடா்பாக மே 23 அன்று வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முகமது சிராஜ் (30) என்பவா் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டாா்.
அவரது கூட்டாளியான ராகுல் என்பவருடன் இணைந்து நொய்டாவில் போலி அழைப்பு மையத்தை நடத்தி வந்ததாக அவா் விசாரணையில் தெரிவித்தாா். இதில் தொடா்புடைய பிறரைக் கைது செய்ய தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என காவல் துறையினா் தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சொத்து தகராறு: தில்லி பல்கலை. உதவி பேராசிரியா் கொலை! மேற்கு வங்க தம்பதி, மகன் கைது!
பாகிஸ்தான் ஐஎஸ்ஐ அமைப்புடன் தொடா்புடைய நபா் கைது

ஆன்மிக தீா்வு என்ற பெயரில் இணைய மோசடி: இருவர் கைது

சாந்தினி சௌக் கோயிலில் திருடிய இருவா் கைது: சிலை மற்றும் பித்தளைப் பொருள்கள் மீட்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |
தினமணி செய்திச் சேவை
