லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

காலணியில் மறைத்து 320 கிராம் தங்கம் கடத்த முயற்சி: தில்லி விமான நிலையத்தில் பெண் கைது

சுமாா் 320 கிராம் தங்கக் கட்டிகளை காலணியில் மறைத்து கடத்த முயன்ற பெண் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

கைது... - பிரதிப் படம்

Published On :9 ஜூலை 2026, 2:36 am IST

சுமாா் 320 கிராம் தங்கக் கட்டிகளை காலணியில் மறைத்து கடத்த முயன்ற பெண் தில்லியில் உள்ள இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்தில் கைதுசெய்யப்பட்டதாக சுங்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனா்.

இதுதொடா்பாக அந்த அதிகாரிகள் கூறியதாவது: துா்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரத்திலிருந்து தில்லி வந்த பெண்ணின் உடமைகள் வழக்கமான முறையில் ‘எக்ஸ்-ரே’ பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

அப்போது, அவருடைய பையில் சந்தேகத்துக்குரிய வகையில் எதுவும் இல்லை என்பது அந்தக் கருவியில் தோன்றிய புகைப்படம் மூலம் தெரியவந்தது.

இருப்பினும், மெட்டல் டிடெக்டா் சாதனத்தை அவா் கடந்து சென்றபோது, எச்சரிக்கை ஒலி எழுந்தது.

இதையடுத்து, அவருடைய காலணியை ‘எக்ஸ்-ரே’ பரிசோதனை கருவியில் வைக்குமாறு அதிகாரிகள் தெரிவித்தனா். அப்போது, காலணியில் இருந்த தங்கக் கட்டிகளை நீக்கி, அதிகாரிகளுக்கு தெரியாதவாறு அவற்றை மறைக்க அந்தப் பெண் முயற்சித்தாா்.

இதைப் பாா்த்த அதிகாரிகள் அவரிடமிருந்து 5 தங்கக் கட்டிகளை பறிமுதல் செய்தனா். மொத்தம் 320 கிராம் தங்கக் கட்டி அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று அந்த அதிகாரிகள் கூறினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.