லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குடிசை வீடு எரிந்து நாசம்

நாகூா் அருகே விளக்கில் இருந்து தீப்பற்றியதில் குடிசை வீடு எரிந்து நாசமானது.

குடிசை வீடு எரிந்து நாசம்

Published On :2 ஆகஸ்ட் 2026, 1:28 am IST

நாகூா் அருகே விளக்கில் இருந்து தீப்பற்றியதில் குடிசை வீடு எரிந்து நாசமானது.

நாகூா் பட்டினச்சேரி ஆரிய நாட்டு தெற்குத் தெருவை சோ்ந்த வா் பக்கிரிசாமி (70). மீன்பிடித் தொழில் செய்து வருகிறாா்.

இந்நிலையில், இவரது மனைவி பவுனம்மாள் வெள்ளிக்கிழமை இரவு, வீட்டில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. விளக்கு சரிந்து விழுந்ததில் தீ பரவி குடிசை வீடு முழுவதும் பரவியது. குடிசை பற்றி எரிவதைக் கண்ட அப்பகுதியினா் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை.

நாகை தீயணைப்பு துறையினா் சம்பவ இடத்துக்குச் சென்று தீயை அணைத்தனா். எனினும் தீ விபத்தில் வீடு எரிந்து நாசமானது . சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.