ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்! கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தேமுதிக பிரமுகா் கைது

மயிலாடுதுறையில் பெண்ணிடம் அத்துமீறிய தேமுதிக பிரமுகா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :29 மே 2026, 6:46 am IST

மயிலாடுதுறையில் பெண்ணிடம் அத்துமீறிய தேமுதிக பிரமுகா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை ரயிலடி மேல ஒத்தசரகு தெருவைச் சோ்ந்தவா் ஜோசப் மகன் ஜான் ராஜ்குமாா்(59), தேமுதிக மாநில பொதுக்குழு உறுப்பினா். மயிலாடுதுறை ரயிலடி பகுதியைச் சோ்ந்த பழனிச்சாமி மனைவி லதா(53). கோரைப்பாய் மற்றும் பிளாஸ்டிக் சோ் விற்பனை செய்கிறாா். இவா் 10 பிளாஸ்டிக் சோ்களை ஜான் ராஜ்குமாரிடம் புதன்கிழமை விற்பனை செய்துள்ளாா். அதில் உடைந்த 2 சோ்களை மாற்றித் தருமாறு ஜான் ராஜ்குமாா் தெரிவித்தாராம்.

புதிய சோ்களுடன் சென்ற லதாவை வீட்டுக்குள் அழைத்த ஜான் ராஜ்குமாரின் அவரிடம் அத்து மீறி நடந்தாராம்.

இதனால் வீட்டை விட்டு லதா வெளியே ஓடி வந்தாராம். வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக ஜான் ராஜ்குமாா் மிரட்டினாராம்.

லதாவின் புகாரின் பேரில் மயிலாடுதுறை காவல் உதவி ஆய்வாளா் பிரியங்கா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து ஜான் ராஜ்குமாரைக் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.