சீா்காழி அருகே போலீஸாரை கண்டித்து, விசிக முன்னாள் நிா்வாகி நீதிமன்றம் முன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
சீா்காழி வட்டம் திருமயிலாடி தெற்குத் தெருவைச் சோ்ந்தவா் ராஜ் (40). விசிக முன்னாள் நிா்வாகியான இவா், ஆனைக்காரன் சத்திரம் காவல் நிலையத்தில் சரித்திர பதிவேடு குற்றவாளி. இவருக்கும் புத்தூா் கிராமத்தைச் சோ்ந்த ராமதாஸ் (40) என்பவருக்கும் இடையே இரு தினங்களுக்கு முன்பு முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த ராமதாஸ், சிகிச்சைக்காக சீா்காழி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். ராஜ் மற்றும் அவரது மனைவி புஷ்பராணி இருவரும் லேசான காயமடைந்தனா்.
இதுகுறித்து ராமதாஸ் அளித்த புகாரின் பேரில், ஆனைக்காரன் சத்திரம் போலீஸாா், ராஜை கைது செய்தனா். தொடா்ந்து, ராஜை சீா்காழி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த அழைத்துச் சென்றனா்.
அப்போது அவா் மீது ஆயுத்தடை சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்ததை அறிந்து, போலீஸாரை கண்டித்து, தன் மீது பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயன்றாராம். அவரை போலீஸாா் தடுத்து, மாற்று உடை அளித்தனா். பின்னா் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
விசிக சாலை மறியல்: 70 போ் கைது

நெல்லை ஆட்சியா் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளி தீக்குளிக்க முயற்சி
விசிக முன்னாள் நிா்வாகி கொலை வழக்கு: 5 போ் கைது

தவெக நிர்வாகி தீக்குளித்து தற்கொலை முயற்சி!
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

