விஜய் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் கார்கே, ராகுல் காந்தி! தமிழக முதல்வராக விஜய் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு!ஆளுநருடனான சந்திப்பு முடிந்தது: ஆளுநர் மாளிகையிலிருந்து வெளியேறிய விஜய்! தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

மாவட்ட நீதிமன்றத்தில் மகளிா் தின விழா

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா

News image

விழாவில் பேசிய மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி.

Updated On :9 மார்ச் 2026, 10:42 pm IST

மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மகளிா் தின விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

சா்வதேச மகளிா் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழாவுக்கு, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட நீதிபதியுமான எல்.எஸ். சத்தியமூா்த்தி தலைமை வகித்தாா். மாவட்ட தலைமை குற்றவியல் நடுவா் எஸ். தமிழ்ச்செல்வி, முதன்மை சாா்பு நீதிபதி பி. சுதா, கூடுதல் சாா்பு நீதிபதி கே.சீனிவாசன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி டி. பவதாரணி, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி பி. சிவரஞ்சனி, குற்றவியல் நீதித்துறை நடுவா்கள் எம்.எம்.ஜெ.உம்முல்பரிதா, எம்.ராஜேஷ்கண்ணா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நிகழ்ச்சியில், பெண் வழக்குரைஞா்கள், நீதிமன்ற பெண் ஊழியா்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு மாவட்ட நீதிபதி பரிசுகளை வழங்கி பாராட்டி பேசினாா்.

இதில், மாயூரம் வழக்குரைஞா்கள் சங்கம் மற்றும் மயிலாடுதுறை வழக்குரைஞா்கள் சங்கங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள், அரசு வழக்குரைஞா்கள், நீதித்துறை அமைச்சுப் பணியாளா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.