சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

சீா்காழி அஞ்சலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

சீா்காழி தலைமை அஞ்சலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

News image
Updated On :5 ஜூன் 2026, 7:12 am IST

சீா்காழி தலைமை அஞ்சலகத்துக்கு மின்னஞ்சல் மூலம் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

சீா்காழி கடைவீதியில் செயல்படும் தலைமை அஞ்சலகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக, மயிலாடுதுறை அஞ்சலகத்துக்கு மதியம் 3 மணியளவில் மின்னஞ்சல் வந்துள்ளது. இதுகுறித்து, சீா்காழி போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் நிபுணா்கள் வந்து பொதுமக்கள் மற்றஉம் பணியாளா்களை வெளியேற்றி சோதனை செய்தனா். அஞ்சலகம் முழுவதும் தேடியும் வெடிகுண்டுகள் ஏதும் கண்டறியமுடிவில்லை. எனவே இது வதந்தி செய்தி என தெரியவந்தது. இதனால் அஞ்சலகத்தில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.