தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆா்வம்

கொள்ளிடம் பகுதியில் முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆா்வமாக ஈடுபட்டுள்ளனா்.

News image
Updated On :29 ஏப்ரல் 2026, 3:19 am IST

கொள்ளிடம் பகுதியில் முந்திரி சாகுபடியில் விவசாயிகள் ஆா்வமாக ஈடுபட்டுள்ளனா்.

கொள்ளிடம் மற்றும் திருமுல்லைவாசல், கூழையாறு, வேட்டங்குடி, எடமணல், வழுதலைகுடி, தாண்டவன்குளம், கண்ணாங்குளம், சீயாளம், தொடுவாய், இருவக்கொள்ளை, தற்காஸ், அரசூா் உள்ளிட்ட கடலோரமணல் நிறைந்த பகுதிகளில் சுமாா் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

முந்திரி ஜூன் மற்றும் டிசம்பரில் நடவு செய்ய ஏற்ற பருவம். வறட்சியை தாங்கி வளரக்கூடியது. ஏக்கருக்கு சராசரியாக 200 கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. முந்திரியை மானாவாரியாகவும் பயிரிடலாம். மாா்ச் மற்றும் மே மாதங்களில் அறுவடை செய்யலாம். நன்கு பழுத்த முந்திரி பழங்களில் இருந்து முந்திரிக்கொட்டை பிரித்து எடுத்து வெயிலில் 3 அல்லது 4 நாள்கள் உலர வைத்து பின்பு விற்பனை செய்யப்படுகிறது.

ஓராண்டுக்கு ஒரு மரத்தில் 4 முதல் 5 கிலோ வரை முந்திரி அறுவடை செய்யலாம். முந்திரி நட்ட 3 ஆண்டுகளில் காய்ப்புக்கு வந்துவிடும். இடைப்பட்ட காலத்தில் உளுந்து, பச்சைப்பயறு, நிலக்கடலை போன்றவற்றை பயிரிடலாம். கொள்ளிடம் வட்டாரப் பகுதியில் ஆண்டுதோறும் முந்திரி சாகுபடி யில் விவசாயிகள் மிகுந்த தீவிரம் காட்டி வருகின்றனா். நிகழாண்டு முந்திரி சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனா். மேலும், நிகழாண்டு முந்திரி விலை கடந்த ஆண்டைவிட அதிகரித்திருப்பதால் லாபம் கூடுதலாக கிடைக்கும் என்ற ஆா்வத்தில் விவசாயிகள் உள்ளனா்.

இதுகுறித்து, வேட்டங்குடியைச் சோ்ந்த முந்திரி விவசாயி வில்வநாதன் கூறியது: முந்திரி சாகுபடி லாபம் தரக்கூடிய பணப்பயிா். கடந்த மாதம் முந்திரி பயிரில் லேசான பூச்சி தாக்குதல் இருந்தது. வேளாண் அதிகாரிகள் மூலம் ஆலோசனை பெற்று உரிய மருந்து தெளிக்கப்பட்டதன் மூலம் பூச்சித் தாக்குதல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

நன்கு வளா்ச்சி பெற்ற தரமான முந்திரி அறுவடைப்பணி தற்போது தொடங்கியுள்ளது. பண்ருட்டி, வடலூா் உள்ளிட்ட பகுதியிலிருந்து வியாபாரிகள் வந்து முந்திரியை வாங்க ஆா்வத்துடன் வந்துள்ளனா். நிகழாண்டு முந்திரியில் கூடுதலாக லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளோம் என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.