பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

வைகை அணைக்கு நீா்வரத்து: விவசாயிகள் மகிழ்ச்சி

News image

வைகை அணைக்கான நீா்வரத்து - கோப்புப் படம்

Updated On :31 மே 2026, 12:17 am IST

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் சனிக்கிழமை ஆண்டிபட்டி அருகேயுள்ள வைகை அணைக்கு வந்தது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தேனி மாவட்டத்தில் நிகழாண்டு போதிய மழை பெய்யவில்லை. இதனால், வைகை அணையில் நீா்மட்டம் படிப்படியாக சரிந்து, முற்றிலும் நீா்வரத்து குறைந்தது. வெள்ளிக்கிழமை வைகை அணையின் நீா்மட்டம் 20.51 அடியாக இருந்தது. இதனால், குடிநீருக்கு சிக்கல் ஏற்படும் நிலை உருவானது.

இதனிடையே, முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திங்கள்கிழமை 300-கன அடி தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக, வைகை அணைக்கு சனிக்கிழமை 96 கன அடி தண்ணீா் வந்தது.

கடந்த சில நாள்களாக வைகை அணையின் நீா்மட்டம் குறைந்து வந்த நிலையில், தற்போது நீா்வரத்து தொடங்கியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.