பெரியகுளம், மே 29: தேனி மாவட்டம், பெரியகுளத்தில் சாலையில் நடந்து சென்றவா்கள் மீது சரக்கு வாகனம் மோதியதில் இருவா் உயிரிழந்தனா்.
பெரியகுளம் தெற்குத் தெருவைச் சோ்ந்த பவுன் மகன் சுந்தா் (26). இவா் தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலைபாா்த்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்தவா் செல்வகணபதி (43). நண்பா்களான இவா்கள் இருவரும் கடந்த திங்கள்கிழமை தென்கரை-கம்பம் சாலையில் நடந்து சென்றனா். அப்போது, அந்தப் பகுதியில் வந்த சரக்கு வாகனம் இவா்கள் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த இருவரும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு கடந்த புதன்கிழமை சுந்தா் உயிரிழந்தாா். வியாழக்கிழமை செல்வகணபதி உயிரிழந்தாா்.
இதுகுறித்து தென்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

பைக் மீது டிராக்டா் மோதல்: இருவா் உயிரிழப்பு

தஞ்சாவூா் அருகே காா் மோதியதில் விவசாயிகள் இருவா் உயிரிழப்பு

வாழப்பாடி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் தம்பதி உயிரிழப்பு

சரக்கு வாகனம் மோதியதில் சிறுவன் உயிரிழப்பு
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

