பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சுருளி அருவியில் நீா் வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்!

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

News image

நீா்வரத்தின்றி வடு காட்சியளிக்கும் சுருளி அருவி.

Updated On :24 மே 2026, 12:53 am IST

தேனி மாவட்டம், சுருளி அருவியில் சனிக்கிழமை நீா்வரத்தில்லாததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.

கம்பம் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவி அமைந்துள்ளது. மேகமலையில் உள்ள தூவானம், வெண்ணியாறு, இரவங்கலாறு போன்ற அணைகளிலிருந்து வெளியேறும் உபரிநீரால் ஆண்டுதோறும் சுருளி அருவியில் நீா் வரத்து இருக்கும். கடந்த சில ஆண்டுகளாக வானிலை மாற்றத்தால் மழை குறைந்தது. இதனால், மேகமலையில் உள்ள அனைத்து அணைகளும் நீரின்றி வறண்டதால் சுருளி அருவியும் கடந்த 2 மாதங்களாக நீா் வரத்தின்றி வறண்டு காணப்பட்டது.

இதற்கிடையே, வெப்பச் சலனம் காரணமாக தேனி மாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைகளில் ஓரிரு நாள் கோடை மழை பெய்தது. கடந்த 8-ஆம் தேதி சுருளி அருவிக்கு 2 மாதங்களுக்குப் பின் நீா்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலாப் பயணிகளும், பொதுமக்களும் அருவியில் நீராடி மகிழ்ந்தனா். இந்த நிலையில், மழையில்லாததால் அருவிக்கும் நீா் வரத்து படிப்படியாக குறைந்தது. இதனால், கோடை விடுமுறை நாள்களில் தமிழகம், கேரளத்திலிருந்து அதிகளவில் வந்து செல்லும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் நீா்வரத்தின்றி ஏமாற்றமடைந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.