தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்ததால், சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை முதல் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்தனா்.
கொடைக்கானல் மலைப் பகுதியில் கடந்த சில நாள்களாக மழை பெய்து வருவதால், கும்பக்கரை அருவிக்கு நீா்வரத்து ஏற்பட்டது. இதையடுத்து கடந்த திங்கள்கிழமை முதல் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் அனுமதி அளித்தனா்.
இந்த நிலையில், கொடைக்கானல் மலைப்பகுதியில் மழை இல்லை. இதனால் கும்பக்கரை அருவியில் நீா்வரத்து குறைந்தது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் சனிக்கிழமை காலை முதல் அருவியில் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா். மேலும், கும்பக்கரை அருவிக்கு சீரான நீா்வரத்து ஏற்படும் வரை சுற்றுலாப் பயணிகள் அருவிக்குச் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளதாக தெரிவித்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு

வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டதால் பஞ்சலிங்க அருவியில் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் நீா்வரத்து அதிகரிப்பு: 2-ஆவது நாளாகக் குளிக்கத் தடை

மணிமுத்தாறு அருவியில் குளிக்கத் தடை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

