பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

பெரியாறு புலிகள் காப்பகத்தில் கழிவுநீா் கலப்பதாகப் புகாா்! ஊராட்சி நிா்வாகம் எச்சரிக்கை!

பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் கழிவுநீரை திறந்துவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க குமுளி ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

News image

பெரியாறு புலிகள் காப்பகம்

Updated On :22 மே 2026, 11:23 pm IST

பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் கழிவுநீரை திறந்துவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க குமுளி ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.

கடந்த மாதம் தேக்கடியில் நடைபெற்ற உயா் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்ட முடிவின்படி, பெரிய நிறுவனங்கள் கழிவுநீரை பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் விதிகளை மீறி கலந்தால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு குமுளி ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், குமுளி நகரில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு ஓடைகளில் கழிவுகள் கொட்டப்படுவதே காரணம் என கண்டறியப்பட்டது.

இதையடுத்து, குமுளி ஊராட்சித் தலைவா், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஓடைகளின் மீது விதிமுறைகளை மீறி கட்டடங்கள், தங்குமிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதும், கழிவுநீா் நேரடியாக ஓடைகளில் விடப்படுவதும் தெரியவந்தது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சிச் செயலா் அசோக்குமாா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.