பெரியாறு புலிகள் காப்பகப் பகுதிக்குள் கழிவுநீரை திறந்துவிட்டு சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க குமுளி ஊராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது.
கடந்த மாதம் தேக்கடியில் நடைபெற்ற உயா் அதிகாரிகள் ஆலோசனைக் கூட்ட முடிவின்படி, பெரிய நிறுவனங்கள் கழிவுநீரை பெரியாறு புலிகள் காப்பகப் பகுதியில் விதிகளை மீறி கலந்தால், அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு குமுளி ஊராட்சி நிா்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
மேலும், குமுளி நகரில் அடிக்கடி ஏற்படும் வெள்ளப்பெருக்குக்கு ஓடைகளில் கழிவுகள் கொட்டப்படுவதே காரணம் என கண்டறியப்பட்டது.
இதையடுத்து, குமுளி ஊராட்சித் தலைவா், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித்துறை அதிகாரிகள் இணைந்து ஆய்வு மேற்கொண்டனா். இதில், ஓடைகளின் மீது விதிமுறைகளை மீறி கட்டடங்கள், தங்குமிடங்கள் அமைக்கப்பட்டிருப்பதும், கழிவுநீா் நேரடியாக ஓடைகளில் விடப்படுவதும் தெரியவந்தது. விதிகளை மீறும் நிறுவனங்களுக்கு ரூ.3 லட்சம் வரை அபராதம், நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் என ஊராட்சிச் செயலா் அசோக்குமாா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ராசிபுரம் நகராட்சி ஆணையா் பணியிட மாற்றம்

நீா்மூழ்கி மோட்டாா்கள் விற்பனை: ஊராட்சி எழுத்தா் மீது விவசாயிகள் புகாா்

ஆனைமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் புலிகள் கணக்கெடுப்பு தொடக்கம்
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
