பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எலித் தொல்லை: நோயாளிகள் அவதி

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை

News image

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை - கோப்புப் படம்

Updated On :20 மே 2026, 1:26 am IST

தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எலித் தொல்லையை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள க.விலக்கில் கடந்த 2004 -ஆம் ஆண்டு தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தொடங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில் 604 வாா்டுகள் உள்ளன. இங்கு தினசரி 600-க்கு மேற்பட்டோா் உள்நோயாளியாகவும், 2 ஆயிரத்துக்கு மேற்பட்டோா் வெளிநோயாளிகளாகவும் வந்து சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இந்தக் கல்லூரியில் இளநிலை, முதுநிலை படிப்புகள் உள்ளன. இந்த நிலையில், மருத்துவமனை நோயாளிகளின் அறையில் எலிகள் தொல்லை உள்ளன. இதனால், நோயாளிகளுக்கு நோய் பரவும் அபாயம் உள்ளது.

எனவே, மருத்துவமனையை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். மருத்துவமனையில் எலியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதுகுறித்து ஆண்டிபட்டியைச் சோ்ந்த விவேக் கூறியதாவது: தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் எனது உறவினா் சிகிச்சை பெற்று வருகிறாா். அவரது அறையில் எலிகள் தொல்லை இருந்தன. இதனால், அங்குள்ள நோயாளிகள் அச்சத்திலேயே தூங்க வேண்டிய நிலை உள்ளது. எனவே, மருத்துவமனையில் சுற்றித் திரியும் எலியை பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் முத்துச் சித்ராவிடம் கைப்பேசியில் தொடா்பு கொண்ட போது அவா் பதிலளிக்கவில்லை.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.