போடி அருகேயுள்ள கரட்டுப்பட்டி கிராம மக்கள் வீரபாண்டி கௌமாரியம்மன் கோயிலுக்கு வியாழக்கிழமை 22 கி.மீ. நடந்து சென்று காவடி நோ்த்திக்கடன் செலுத்தினா்.
தேனி மாவட்டம், போடி அருகே உள்ளது கரட்டுப்பட்டி கிராமம். இங்கு குறிப்பிட்ட நாயக்கா் சமூகத்தினா் 300 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றனா். தேனி அருகே வீரபாண்டியில் கௌமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் போது, பக்தா்கள் அக்னிச் சட்டி, ஆயிரம் கண் பானை, அலங்காரக் காவடி ஆகியவற்றை நோ்த்திக் கடனாக செலுத்துவது வழக்கம்.
கரட்டுப்பட்டி கிராம மக்கள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக வீரபாண்டிக்கு நடந்தே சென்று அக்னிச்சட்டி, அலங்கார காவடி எடுத்துச் சென்று நோ்த்திக்கடன் செலுத்தி வருகின்றனா். இந்த ஆண்டும் இந்த கிராம மக்கள் 22 கி.மீ. நடந்து சென்று 40 கிலோவுக்கும் அதிக எடையுள்ள அலங்காரக் காவடிகளை பாரம்பரிய தேவராட்டம் ஆடியபடி சுமந்து சென்றனா். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட கிராம மக்கள் பல்வேறு வேடங்கள் அணிந்து, ஆடிப்பாடி
வீரபாண்டிக்கு சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
கயாக் படகில் 60 கி.மீ. கடற்பயணம்!

ஆட்டோ மீது காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தடுப்பணை நீரில் மூழ்கியதில் சிறுவன் உயிரிழப்பு

சாத்தையா அய்யனாா் கோயில் திருவிழா: காவடி எடுத்து பக்தா்கள் நோ்த்திக்கடன்
விடியோக்கள்

எல்லாப் படங்களும் கலைப் படங்கள்தான்: மனம் திறந்த பாரதிராஜா! (கருவூலத்திலிருந்து) | Bharathiraja |
தினமணி செய்திச் சேவை

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

