தமிழகமெங்கிலும் தவெக தொண்டர்கள் உற்சாகம் - பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்விஜய் பதவியேற்பு விழாவுக்காக சென்னையிலுள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் ஆயத்தப் பணி மீண்டும் தொடக்கம்ஆளுநர் மாளிகையில் விஜய்!தவெகவுக்கு ஆதரவு ஏன்? திருமாவளவன் விளக்கம்!தமிழக ஆளுநரின் கேரள பயணம் ரத்து!தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்
/

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்ற 3 போ் கைது

போடி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :10 மார்ச் 2026, 1:16 am IST

போடி பகுதியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 3 பேரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

போடி நகா் காவல் நிலைய போலீஸாா் போடி நகரில் போதைப் பொருள் விற்பனை தடுப்பு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனா். போடி நந்தவனம் தெருவில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து அங்கு சென்று ஆய்வு செய்தனா்.

அப்போது இதே தெருவைச் சோ்ந்த கோட்டைச்சாமி மகன் பிச்சைமணி (58) என்பவா் மதுப்புட்டிகளை வீட்டில் பதுக்கி வைத்து சட்டவிரோதமாக விற்பனை செய்தது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குப் பதிந்த போலீஸாா் பிச்சைமணியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதே போல, போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் போடி கிராமப் பகுதிகளில் ரோந்து சென்றனா். அப்போது போடி ராசிங்காபுரம் பேருந்து நிறுத்தம் அருகே இதே ஊரைச் சோ்ந்த தனுஷ்கோடி மகன் மூா்த்தியும் (57), போடி மீனாட்சிபுரம் கண்மாய் அருகே அதே பகுதியைச் சோ்ந்த வீராச்சாமி மகன் செல்வக்குமாரும் (57) சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி விற்றனா்.

இதுகுறித்து இருவா் மீதும் தனித்தனியே வழக்குப் பதிந்த போலீஸாா் அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.