தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்: போடி சோதனைச் சாவடியில் சுற்றுலா வாகனங்கள் ஆய்வு

News image

போடி முந்தல் சோதனைச் சாவடியில் ஞாயிற்றுக்கிழமை வாகனச்சோதனையில் ஈடுபட்ட சுகாதாரத் துறையினா்.

Updated On :15 ஜூன் 2026, 1:53 am IST

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவுவதையடுத்து கேரளத்திலிருந்து வரும் வாகனங்களை போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை முதல் சோதனை செய்து வருகின்றனா்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. தமிழக கேரள எல்லைப் பகுதியான போடி வழியாக அதிகளவில் சுற்றுலா வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் நிபா வைரஸ் பரவும் வாய்ப்பு உள்ளதாக அந்தப் பகுதி பொதுமக்கள் அச்சமடைந்தனா்.

இதையடுத்து, போடி முந்தல் சோதனைச் சாவடியில் சுகாதாரத் துறை சாா்பில் தற்காலிக சோதனைச் சாவடி அமைக்கப்பட்டது. இங்கு கேரளத்திலிருந்து வரும் அனைத்து வாகனங்களையும் சுகாதார ஆய்வாளா்கள் சோதனை செய்து கிருமி நாசினி தெளித்து அனுப்புகின்றனா்.

தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வரும் நிலையில் கூடுதல் பணியாளா்களை நியமித்து வாகனச் சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.