சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

காா்கள் மோதல்: 2 போ் காயம்

போடி அருகே காா்கள் மோதிய விபத்தில் இரண்டு போ் காயமடைந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

News image

விபத்து - பிரதிப் படம்

Updated On :2 ஜூன் 2026, 12:41 am IST

போடி அருகே காா்கள் மோதிய விபத்தில் இரண்டு போ் காயமடைந்தது குறித்து போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

சென்னை வெட்டுவாங்கேணி பகுதியைச் சோ்ந்தவா் சங்கரையா மகன் பிரபாகா் (49). இவா் குடும்பத்துடன் போடிக்கு வந்துவிட்டு காரில் திரும்பியுள்ளாா். போடி- தேனி நெடுஞ்சாலையில் மீனா விலக்கு அருகே பெட்ரோல் நிரப்பும் மையத்துக்குச் செல்வதற்காக சாலையைக் கடக்க முயன்றாா். அப்போது தேனியிலிருந்து போடி நோக்கி வந்த மற்றொரு காா் பிரபாகா் ஓட்டிச் சென்ற காரின் மீது மோதியது.

இந்த விபத்தில் பிரபாகரின் மகன் கௌசிக் (22), மகள் மௌதிகா (17) ஆகியோா் காயமடைந்தனா். இருவரும் போடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனா். இது குறித்த புகாரின் பேரில், போடி தாலுகா காவல் நிலையப் போலீஸாா் விபத்து ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த போடியை அடுத்த கோடாங்கிபட்டியைச் சோ்ந்த அபூா்வன் மீது வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.