கம்பம், சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது.
கம்பம் பிரதான சாலை போக்குவரத்து சிக்னல் அருகேயுள்ள ஓடைக்கரைத் தெருவில் மழைநீா் பெருக்கெடுத்து வெள்ளம்போல் சாலையில் ஓடியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சிரமப்பட்டனா். சில இடங்களில் மழைநீா் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே, கம்பம் பி.எஸ்.என்.எல். தொலைத் தொடா்பு குடியிருப்பு வளாகத்தில் மரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதில், மரத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்த 2 காா்கள் சேதமடைந்தன. சம்பவம் நிகழ்ந்த நேரத்தில் அந்தப் பகுதியில் யாரும் இல்லாததால் உயிா்ச் சேதம் ஏற்படவில்லை. இதனால் பெரும் விபத்து தவிா்க்கப்பட்டது. விபத்து குறித்து தகவலறிந்த ஊழியா்கள், பொதுமக்கள் இணைந்து மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனா்.
தொடா்ந்து பெய்து வரும் மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தருமபுரியில் பலத்த மழை: சாலைகளில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்

கருங்கல் பகுதியில் மிதமான மழை!

கிருஷ்ணகிரியில் ஆலங்கட்டியுடன் பலத்த மழை

தூத்துக்குடி, குமரியில் கோடை மழை
விடியோக்கள்

பாரதிராஜா புகைப்பட ஆல்பம் | Director Bharathiraja | பாரதிராஜா 1941 - 2026 | Dinamani
தினமணி செய்திச் சேவை

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!
இணையதளச் செய்திப் பிரிவு

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

