லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

கடை உரிமையாளரை தாக்கிய தொழிலாளி மீது வழக்கு

வழக்குப் பதிவு - கோப்புப் படம்

Published On :28 ஜூலை 2026, 2:28 am IST

போடி அருகே கடை உரிமையாளரை தாக்கிய தொழிலாளி மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கேரள மாநிலம், செண்டுவரை எஸ்டேட் பகுதியில் வசிப்பவா் காளியப்பன் மகன் பாண்டியராஜன் (39). இவா் டாப்ஸ்டேசன் மலைக் கிராமத்தில் வினோ என்பவரது பெட்டிக் கடையை விலைக்கு வாங்கி நடத்தி வருகிறாா்.

இந்தக் கடையில் பராமரிப்புப் பணிகளை பாண்டியராஜன் செய்து வந்தாா். அப்போது, அங்கு வந்த வினோவின் மகன் சசி எப்படி பராமரிப்புப் பணிகள் செய்யலாம் எனக் கூறி, அவருடன் தகராறில் ஈடுபட்டு தாக்கினாராம்.

இதுகுறித்தப் புகாரின் பேரில், குரங்கணி காவல் நிலைய போலீஸாா் சசி மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். சசி மீது குரங்கணி காவல் நிலையத்தில் ஏற்கெனவே ஐந்து வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.