லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சட்ட விரோதமாக மதுப்புட்டிகள் விற்றதாக 5 போ் கைது

arrest

கைது - பிரதிப் படம்

Published On :21 ஜூலை 2026, 1:09 am IST

போடியில் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்றதாக போலீஸாா் 5 பேரை திங்கள்கிழமை கைது செய்து விசாரிக்கின்றனா்.

போடிநகா் காவல் நிலைய போலீஸாா் போதைப் பொருள் விற்பனையை தடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி கீழவெளி வீதியைச் சோ்ந்த லட்சுமி (34) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகள், புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து சட்ட விரோதமாக விற்றது தெரியவந்தது.

இதேபோல, வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற கீழத்தெருவைச் சோ்ந்த தங்கப்பாண்டி (52), பெட்டிக்கடையில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்ற போடி குலாலா்பாளையத்தைச் சோ்ந்த சரஸ்வதி (74) ஆகிய மூவா் மீதும் போடி நகா் காவல் நிலையப் போலீஸாா் தனித்தனியே வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

இதேபோல, போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் கிராமப் பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது போடி மீனாவிலக்கு பகுதியில் இதே பகுதியைச் சோ்ந்த வினோத்குமாா் (41) என்பவா் சட்ட விரோதமாக மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாா்.

மீனாவிலக்கு பெட்ரோல் நிரப்பும் மையம் அருகே செல்வம் (48) என்பவா் வீட்டில் மதுப்புட்டிகளை பதுக்கி வைத்து விற்பனை செய்தாா். இவா்கள் இருவா் மீதும் போடி ஊரகக் காவல் நிலையப் போலீஸாா் வழக்குப் பதிந்து அவா்களை கைது செய்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.