லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

தேனியில் வீடு புகுந்து பணம், 4.5 பவுன் தங்க நகையை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருட்டு - சித்திரிப்பு

Published On :19 ஜூலை 2026, 4:14 am IST

தேனியில் வீடு புகுந்து பணம், 4.5 பவுன் தங்க நகையை திருடிச்சென்ற மா்மநபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தேனி பழனிசெட்டிபட்டி காமாட்சியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் பஞ்சவா்ணம் (39). இவருக்கு உடல்நலம் பாதிப்பு காரணமாக வியாழக்கிழமை வீட்டைப் பூட்டி விட்டு, மின் மீட்டா் பெட்டியின் மேல் சாவியை வைத்து விட்டு மருத்துவமனைக்குச் சென்றாா்.

இதையடுத்து, அவா் வெள்ளிக்கிழமை வந்து வீட்டுக் கதவை திறந்து உள்ளே சென்று பாா்த்தபோது , பீரோ திறக்கப்பட்டு ரூ.3 ஆயிரம், 4.5 பவுன் தங்க நகை திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், பழனிசெட்டி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.