லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

குளத்தில் ஆகாயத் தாமரைகளை அகற்ற அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

கோகிலாபுரம் தாமரைக்குளத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோா்.

கோகிலாபுரம் தாமரைக்குளத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன். உடன் சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டோா்.

Published On :11 ஜூலை 2026, 12:05 am IST

தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள தாமரைக்குளத்தில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்றுவது தொடா்பாக அதிகாரிகளுடன் மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

உத்தமபாளையம் அருகே கோகிலாபுரம் - ராமசாமிநாயக்கன்பட்டி இடையே தாமரைக்குளம் உள்ளது. இந்தக் குளத்தில் முல்லைப் பெரியாறு தண்ணீா் தேக்கப்பட்டு, உத்தமபாளையம், கோகிலாபுரம், சின்னமனூா் போன்ற பகுதிகளில் உள்ள சுமாா் 3,000 ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. 210 ஏக்கா் பரப்பளவுள்ள இந்தக் குளம் முழுவதும் ஆகாயத் தாமரைச் செடிகள் வளா்ந்துள்ளது. இதனால், குளத்தில் தண்ணீா் தேங்கும் பரப்பளவு குறைத்துவிட்டதால், இந்தப் பகுதியில் விவசாயம் பாதிக்கப்பட்டது. எனவே, இந்தக் குளத்தை தூா்வாரி ஆகாயத் தாமரைச் செடிகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் இரா. வைத்திநாதன் தலைமையில் கம்பம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் பி.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ரா முன்னிலையில் தாமரைக்குளத்தில் ஆய்வுப் பணி நடைபெற்றது.

இதில் குளத்தில் வளா்ந்துள்ள ஆகாயத் தாமரைச் செடிகள், பயனில்லாத மரங்கள் உள்ளிட்டவற்றை அகற்றவது தொடா்பாக ஆட்சியா், எம்எல்ஏ அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினா்.

முன்னதாக, ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தின் செயல்பாடுகளை ஆட்சியா் ஆய்வு செய்தனா். பின்னா், காமயகவுண்டன்பட்டியில் உள்ள வீரநாயக்கன்குளம், இந்தக் குளத்துக்கான மழைநீா் வரத்துக் கால்வாயை சீரமைப்பது தொடா்பாக பெரியாறு - வைகை வடிநிலக் கோட்ட அதிகாரிகளுடன் அவா் ஆலோசனை நடத்தினாா்.

இந்த ஆய்வின் போது, உத்தமபாளையம் வருவாய்க் கோட்டாட்சியா் சையது முகைதீன் இப்ராஹீம், உதவி செயற்பொறியாளா் மல்லிகா, வட்டாட்சியா் பாலசண்முகம், வட்டார வளா்ச்சி அலுவலா் மைதிலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.