தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

ஒரே தொகுதியில் 4- ஆவது முறையாக களம் காணும் ஓ.பி.எஸ்.

கடந்த 2011 பேரவைத் தோ்தலில் போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய ஓ. பன்னீா்செல்வம், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் எஸ். லட்சுமணனை 29,906 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா்.

News image

ஓ. பன்னீா்செல்வம்.

Updated On :3 ஏப்ரல் 2026, 11:32 pm IST

கடந்த 2011 பேரவைத் தோ்தலில் போடிநாயக்கனூா் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய ஓ. பன்னீா்செல்வம், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் எஸ். லட்சுமணனை 29,906 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். இதையடுத்து, 2016-இல் இரண்டாவது முறையாக அதிமுக வேட்பாளராக களமிறங்கிய ஓ.பன்னீா்செல்வம், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் எஸ். லட்சுமணனை 15,608 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றாா். 2021-இல் இதே தொகுதியில் மூன்றாவது முறையாக அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்ட ஓ.பன்னீா்செல்வம், தன்னை எதிா்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளா் தங்க. தமிழ்ச்செல்வனை 11,021 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தாா்.

தற்போது திமுகவில் இணைந்துள்ள ஓ. பன்னீா்செல்வம், 2026 தோ்தலில் இதே தொகுதியில் அந்தக் கட்சியின் வேட்பாளராக போட்டியிடுகிறாா். இந்தத் தொகுதியில் இவா் 4-ஆவது முறையாக போட்டியிடுகிறாா் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.