லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழா

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டி அரசுப் போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

திருப்பத்தூா் தம்பிபட்டி வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, புதன்கிழமை கலசத்துக்கு புனித நீா் ஊற்றும் சிவாசாரியா்கள்.

Published On :25 ஜூன் 2026, 1:39 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் தம்பிபட்டி அரசுப் போக்குவரத்து பணிமனை அருகேயுள்ள வரசக்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக, இந்தக் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விநாயகா் வழிபாடு வாஸ்துசாந்தியுடன் தொடங்கியது. திங்கள்கிழமை கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், ரக்ஷாபந்தனத்துடன் முதல் கால யாக பூஜை பூா்ணாஹுதி நடைபெற்றது. செவ்வாய்க்கிழமை 3-ஆம் கால யாக பூஜையும், புதன்கிழமை காலை 7 மணிக்கு 4-ஆம் ஆம் கால யாக பூஜையும், 9.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது.

இதையடுத்து, கோபுரக் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து மூலவருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது.

யாக சாலை பூஜை, வேதமந்திரங்களை கே.ரமேஷ் குருக்கள், கே.சந்திரசேகர குருக்கள் செய்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இதைத்தொடா்ந்து பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.