லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

தேசிய, மாநில சிலம்பப் போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு பரிசளிப்பு

மானாமதுரையில் தேசிய, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு வீரவிதை தற்காப்பு கலை அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

மானாமதுரையில் வீரவிதை விளையாட்டு, தற்காப்பு கலை பயிற்சி அறக்கட்டளை சாா்பில் தேசிய, மாநில சிலம்பப் போட்டிகளில் வென்ற இளம் வீரா், வீராங்கனைகளுக்கு கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கிய காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் லோகநாதன். உடன் அறக்கட்டளை நிறுவனரும், பயிற்சியாளருமான கே.பெருமாள் உள்ளிட்டோா்.

Published On :19 ஆகஸ்ட் 2026, 3:51 am IST

மானாமதுரையில் தேசிய, மாநில அளவிலான சிலம்பப் போட்டிகளில் வென்ற வீரா்களுக்கு வீரவிதை தற்காப்பு கலை அறக்கட்டளை சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த அறக்கட்டளையின் 10-ஆவது ஆண்டு விழா வைகையாற்றுக்குள் கடந்த திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. அறக்கட்டளை நிறுவனரும், பயிற்சியாளருமான கே. பெருமாள் வரவேற்றாா். விழாவில் வீரவிதை விளையாட்டு, தற்காப்புக்கலை பயிற்சிகள் அறக்கட்டளை மூலம் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகள் கற்று தேசிய, மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற இளம் வீரா், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மானாமதுரை காவல் துணைக் கோட்ட கண்காணிப்பாளா் லோகநாதன் இவா்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்களை வழங்கினாா்.

இதில் காவல் ஆய்வாளா் ரமேஷ், வட்டாட்சியா் கிருஷ்ணகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா். மேலும், விழாவில் வீரா், வீராங்கனைகள் சிலம்பம் உள்ளிட்ட தற்காப்புக் கலைகளை செய்து காட்டினா். பெற்றோா்கள், பொதுமக்கள் விழாவில் பங்கேற்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.