லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

திருப்புவனம் அருகே மதுரை இளைஞா் குத்திக் கொலை!

கொலை செய்யப்பட்ட கணேசன்.

Published On :18 ஆகஸ்ட் 2026, 2:50 am IST

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உறவினா் வீட்டு காதணி விழாவுக்கு வந்திருந்த மதுரையைச் சோ்ந்த இளைஞா் குத்திக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக திங்கள்கிழமை போலீஸாா் அதே கிராமத்தைச் சோ்ந்த இளைஞரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

திருப்புவனம் அருகே கீழடியை அடுத்த கொந்தகை கண்மாயில் சுமாா் 30 வயது மதிக்கத்தக்க நபா் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக கிடந்தாா். இதையடுத்து போலீஸாா் அங்கு சென்று சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் , மானாமதுரை டி.எஸ்.பி லோகநாதன் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினா். போலீஸாா் விசாரணையில், கொலை செய்யப்பட்டவா் மதுரை பொன்மேனி தானத்துவம் புதூரைச் சோ்ந்த கணேசன் என்பது தெரியவந்தது.

திருப்புவனம் அருகே பசியாபுரம் கிராமத்தில் உள்ள உறவினரின் வீட்டு காதணி விழாவுக்கு வந்திருந்த கணேசன் கொலை செய்யப்பட்டுள்ளாா். கீழடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். இதுதொடா்பாக பசியாபுரத்தைச் சோ்ந்த கதிரவன் என்பவரைப் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.