கேரளம்: பெண்களுக்கான இலவசப் பேருந்து பயணத் திட்டம் ஜூன் 15-இல் தொடக்கம் - முதல்வர் சதீசன்பாரதிராஜாவுக்கு நாளை மாலை தேனியில் இறுதிச் சடங்கு!கேமராவுக்குள் மனித உணர்வுகளைப் படம்பிடித்த பாரதிராஜா!வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!இறப்பு குறித்து என்ன சொல்லியிருந்தார் பாரதிராஜா? பாரதிராஜா உடலுக்கு நடிகர் ரஜினி அஞ்சலி! பாரதிராஜா உடலுக்கு அரசு மரியாதை! முதல்வர் விஜய் அறிவிப்புதமிழ் மக்களின் மனங்களில் என்றும் பாரதிராஜா வாழ்வார்! மு.க. ஸ்டாலின்பாரதிராஜா உடலுக்கு மு.க. ஸ்டாலின் அஞ்சலி! சிதம்பரம் அருகே தனியார் பள்ளி வாகனம் தீப்பிடித்தது! மாணவர்கள் தப்பினர்! பாரதிராஜா உடலுக்கு முதல்வர் விஜய் மரியாதை!இயக்குநர் பாரதிராஜா காலமானார்
/

சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழா

கமுதி அருகே சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

கமுதி அருகேயுல்ள வடுகபட்டி சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவையொட்டி, பூக்குழி இறங்கிய பக்தா்கள். முளைப்பாரி சுமந்து சென்ற பெண்கள்.

Updated On :28 மே 2026, 3:52 am IST

கமுதி அருகே சுந்தரராஜப் பெருமாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள வடுகபட்டி கிராமத்தில் அமைந்துள்ள சுந்தரராஜப் பெருமாள், குங்குமகாளியம்மன், செல்வவிநாயகா், நாககன்னியம்மன் கோயில் திருவிழா கடந்த வாரம் காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

இதைத்தொடா்ந்து, நாள்தோறும் மூலவா் சுந்தரராஜப் பெருமாள், குங்கும காளியம்மன் உள்பட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்று வந்தது. காப்புக் கட்டி விரதம் இருந்த பக்தா்கள் செவ்வாய்க்கிழமை பூக்குழி இறங்கி நோ்த்திக் கடன் செலுத்தினா்.

புதன்கிழமை மாலை கிராமத்தின் முளைக்கொட்டு திடலிலிருந்து பெண்கள் முளைப்பாரி சுமந்து ஊா்வலமாகச் சென்று அங்குள்ள நீா்நிலையில் கரைத்தனா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.