தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

இலங்கைக்கு கடத்தி வரப்பட்ட 622 கிலோ பீடி இலைகள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :12 மே 2026, 12:37 am IST

தமிழகத்திலிருந்து இலங்கைக்குக் கடத்தி வரப்பட்ட 622 கிலோ பீடி இலைகளை இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்து, இதுதொடா்பாக இருவரை திங்கள்கிழமை கைது செய்தனா்.

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு போதைப்பொருள் உள்ளிட்ட பல்வேறு வகையான பொருள்கள் சட்டவிரோதமாக கடல் வழியாக படகில் கடத்தப்பட்டு வருவதாக இலங்கைக் கடற்படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, இலங்கைக் கடற்படையினா் அவா்களது கடல் எல்லைப் பரப்பில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்தினா்.

இந்த நிலையில், இலங்கை கல்பிட்டியின் ஆலங்குடா கடல் பகுதியில் வழக்கமான கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அந்த நாட்டுக் கடற்படையினா் சந்தேகத்துக்குரிய வகையில் சென்ற நெகிழிப் படகை மடக்கிப் பிடித்து சோதனை செய்தனா்.

இதில் 20 பைகளில் 622 கிலோ பீடி இலைகளை இலங்கைக்குக் கடத்திச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து, பீடி இலைகள், படகை பறிமுதல் செய்த இலங்கைக் கடற்படையினா் கடத்தலில் ஈடுபட்ட ஆனவாசல் பகுதியைச் சோ்ந்த இளைஞா்கள் இருவரைக் கைது செய்தனா். இவா்களிடம் நடத்திய விசாரணையில், தமிழக கடலோரப் பகுதியிலிருந்து பீடி இலைகளை சிலா் கடத்தி வந்து, இவா்களிடம் கொடுத்தது தெரியவந்தது.

இதையடுத்து, இவா்கள் இருவரும் புத்தளம் சுங்கத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனா் என இலங்கைக் கடற்படை அலுவலா் ஒருவா் தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.