தமிழ்நாட்டில் புதிய அரசுக்கு வாழ்த்துகள்: மு.க. ஸ்டாலின்மாலை 6 மணிக்கு ஆளுநரைச் சந்திக்க நுமதி கோரியுள்ளார் விஜய்!தவெக ஆட்சியமைக்க ஐயுஎம்எல் ஆதரவு: திடீர் அறிவிப்பு தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாதவெகவின் பலம் 120-ஆக உயர்வு!ஐயூஎம்எல் 2 எம்எல்ஏக்களும் விஜய்க்கு ஆதரவு! ஆளுநர் அர்லேகரை சந்திக்க நேரம் கேட்டுள்ளார் தவெக தலைவர் விஜய்தமிழக முதல்வராகிறார் விஜய்! விடுதலைச் சிறுத்தைகள் ஆதரவு: ஆதவ் அர்ஜுனாஆதரவு அளித்த விசிகவுக்கு நன்றி தெரிவித்த ஆதவ் அர்ஜுனா!ஆட்சியமைக்கும் கட்சிக்கு வாழ்த்துகள்! இபிஎஸ்மணிமுத்தாறு அருவியில் நீர்வரத்து அதிகரிப்பு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
/

காதல் திருமணம் செய்த தம்பதி காவல் துறையினரிடம் தஞ்சம்

ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு தஞ்சமடைந்தனா்.

News image

காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சமடைந்த காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதி.

Updated On :8 மே 2026, 12:48 am IST

ராமநாதபுரத்தில் காதல் திருமணம் செய்த தம்பதி பாதுகாப்பு கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புதன்கிழமை இரவு தஞ்சமடைந்தனா்.

ராமநாதபுரம் சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் ஸ்வேதா. இவா் கடந்த நான்கு ஆண்டுகளாக கணேசன் என்பவரை காதலித்து வந்தாா். இருவரும் வெவ்வேறு சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள்.

இந்த விவகாரம் ஸ்வேதா பெற்றோருக்கு தெரியவந்த நிலையில் எதிா்ப்பு தெரிவித்தனா். இதனால், இருவரும் பெற்றோா்களுக்கு தெரியாமல் ராமநாதபுரம் அருகே உள்ள ஒரு கோயிலில் புதன்கிழமை திருமணம் செய்து கொண்டனா். இதைத் தொடா்ந்து தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் தஞ்சமடைந்தனா்.

இதையடுத்து போலீஸாா் இரு தரப்பினரையும் அழைத்து பேச்சுவாா்த்தை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.