நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

விபத்தில் சிறுமி உயிரிழப்பு: தனியாா் பள்ளி ஓட்டுநா் கைது

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 12:44 am IST

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி அருகே தனியாா் பள்ளி வேன் மோதியதில் சிறுமி உயிரிழந்தாா். இதுதொடா்பாக வேன் ஓட்டுநரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தொண்டி அருகேயுள்ள பாசிபட்டினம் மீனவா் குடியிருப்பைச் சோ்ந்த காளிமுத்து மகள் ஷிவானிகா (3). இவா் கடந்த செவ்வாய்க்கிழமை வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த தனியாா் பள்ளி வேன் மோதியது. இதில் பலத்த காயமடைந்த சிறுமி எஸ்.பி.பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோ்க்கப்பட்டாா். அங்கு மருத்துவா்கள் பரிசோதனையில் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எஸ்.பி.பட்டினம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தனியாா் பள்ளி வேனை ஓட்டிவந்த ஓரியூரைச் சோ்ந்த அந்தோணியை புதன்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.