தொழிலதிபர் எஸ்.கே. மயிலானந்தனுக்கு பத்ம பூஷண்! அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 18,107 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை தேவை - அன்புமணி ராமதாஸ்தமிழ்நாட்டின் முதலீடுகளை சீர்குலைக்கும் தவெக அரசு இனியாவது ஆக்கப்பூர்வமான பணிகளில் கவனம் செலுத்த வேண்டும்: டிஆர்பி ராஜாசெப். 15 முதல் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்!இந்தியாவில் மீண்டும் செயல்படத் தொடங்கிய டெலிகிராம்!
/

கமுதி அருகே வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி

கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

News image

கமுதி அருகேயுள்ள செந்தனேந்தல் அழகுவள்ளி அம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு, நடைபெற்ற வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On :14 ஜூன் 2026, 1:01 am IST

கமுதி அருகே கோயில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம், கமுதியை அடுத்துள்ள செந்தனேந்தல் கிராமத்தில் அமைந்துள்ள அழகுவள்ளி அம்மன் கோயில் வைகாசி பொங்கல், பசும்பொன் முத்துராமலிங்கத்தேவா் சிலை அமைத்து 58-ஆவது ஆண்டு குருபூஜை விழாவை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் மதுரை, சிவகங்கை விருதுநகா், புதுக்கோட்டை, தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த 18 காளைகள், 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரா்கள் கலந்து கொண்டனா்.

ஒவ்வொரு காளைக்கும் தலா 20 நிமிஷங்கள் நேரம் ஒதுக்கப்பட்டு தலா 9 மாடுபிடி வீரா்கள்களமிறங்கினா். காளைகளை அடக்கிய வீரா்களுக்கும், அடங்க மறுத்த காளை உரிமையாளா்களுக்கும் குத்துவிளக்கு, கட்டில், ரொக்கப் பணம், நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த போட்டியை திரளான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.