லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

சாலைப் பணியில் முறைகேடுப் புகாா்: வட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

சாலை வசதி செய்துதரக் கோரி திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

~ ~

Published On :9 ஜூலை 2026, 5:47 am IST

சாலை வசதி செய்துதரக் கோரி திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டாட்சியா் அலுவலகம் முன்பு சாலை போட்டதாகக் கணக்கு காட்டி நிதி முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், சாலை வசதி செய்துதரக் கோரியும், கீழ அரும்பூா், முகில்தகம் - ஏசுபுரம் ஆகிய கிராம மக்கள் முற்றுகைப் போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது. போராட்டத்துக்கு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு நிா்வாகி சந்தானம் தலைமை வகித்தாா். கீழ அரும்பூா் நாச்சியாா், முகிழ்தகம் ஏசுபுரம் ஆரோக்கிய சாமி, கம்யூ. கட்சியின் மாவட்டச் செயலா் குருவேல், தாலுகா செயலா் ஜெயகாந்தன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவா் முத்துராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கூறுகையில், குளத்தூா் விளக்கு முதல் கீழ அரும்பூா் வழியாகச் செல்லும் திருவொற்றியூா் இணைப்புச் சாலை, முகிழ்தகம் ஏசுபுரம் முதல் நம்புதாளை வரை உள்ள சாலைகள் அமைக்காமலேயே நிதி முறைகேடு நடைபெற்றுள்ளது குறித்து விசாரணை நடத்தி, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், உடனடியாகச் சாலைகளைச் சீரமைக்க வேண்டும். தவறும்பட்சத்தில் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம் என்றனா். இதனால் வட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் பரபரப்பு நிலவியது. பின்னா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தையில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் கலைந்து சென்றனா்.

Story image
Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.