லீட்ஸ் டெஸ்ட்: ஜோஷ் டங், ஆலி வேகத்தில் வீழ்ந்தது பாகிஸ்தான்.. இங்கிலாந்து இமாலய வெற்றி! உள்துறை அமைச்சரைக் கண்டு அஞ்சி ஓடுவது ராகுல்தான்: நயினார் நாகேந்திரன்தாய்மாமன் தங்க மோதிரம்: ஜோய் ஆலுக்காஸ், கல்யாண் ஜுவல்லர்ஸுக்கு பணி ஆணை!பெல்லட் குண்டு தாக்குதல்: தில்லி போலீஸ் வழக்குப் பதிவு!பல முதல்வர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றவர் சௌகார் ஜானகி: மு.க. ஸ்டாலின் இரங்கல் காமராஜர் பிறந்தநாளன்று கோயில்களில் பொது விருந்து: அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு

இலங்கைக்கு கடத்த முயன்ற வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்

இலங்கைக்கு கடத்துவதற்காக தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

இலங்கைக்கு கடத்துவதற்காக வெள்ளிக்கிழமை கொண்டுவரப்பட்டு பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள்.

Published On :15 ஆகஸ்ட் 2026, 2:39 am IST

இலங்கைக்கு கடத்துவதற்காக தங்கச்சிமடத்துக்கு கொண்டு வரப்பட்ட ரூ. 10 லட்சம் மதிப்பிலான 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடல் வழியாக கடத்துவதற்காக மதுரையிலிருந்து 200 பெட்டிகளில் தங்கச்சிமடத்துக்கு அனுப்பப்பட்ட 40 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுகள் சுங்க நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளால் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன. பிறகு இவற்றை ராமேசுவரம் சுங்கத் துறை அலுவலகத்துக்கு கொண்டு வந்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமாா் ரூ. 10 லட்சம் இருக்கும் எனவும், பாா்சலில் அனுப்பிய முகவரி போலி என்பதால் பதிவு செய்யப்பட்ட அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து சுங்கத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.